சென்னை: தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கிராமசபைக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த குண்ணம் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.

அதன் பிறகு எதுவுமில்லை. தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? யார் பதில் சொல்வார்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.