நெட்டிசன்:

காவல் துணை ஆணைய‌ர்  (தலைமையிடம் சென்னை மாநகரம்.) ச.சரவணன் அவர்களது முகநூல் பதிவு

கடந்த 14-11-2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 9351 குரூப் 4 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கோரியுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு கல்வித் தகுதி போதுமானது. வயது வரம்பு மற்றும் பிற விபரங்களை விளம்பரத்தில் பார்க்கவும்.

செய்ய வேண்டியவை

🎯 TNPSC விளம்பரத்தை முழுமையாக படித்து பார்த்து உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். துளியும் காலதாமதம் கூடாது.

🎯கடந்த ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள்களை வாங்கி படித்து கேள்விகளின் தன்மை அறிதல்.

🎯 புதிய பாடத்திட்டத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப தயாராகுங்கள்.

🎯 மொழித்தாளுக்கு முக்கியத்துவம் அளித்து 100க்கு 100 வாங்க முயற்சிக்க வேண்டும். மொழித்தேர்வுக்கும், பொதுஅறிவுக்கும் ஒரே மதிப்பெண் என்பதை உணரவும்.

🎯 நாளிதழ் வாசிப்பு கட்டாயம். தினத்தந்தி, தினமலர், தினகரன் நாளிதழ்கள் தினசரி கேள்வி பதில் வெளியிடுவது நீங்கள் படிக்கத்தான்.

🎯 ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களுடன் இணைந்து படிப்பது பலனளிக்கும்.

🎯 போட்டித் தேர்வு மையத்தில் சேர முடியாதவர்கள் மாவட்ட மைய நூலகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

🎯 வாரந்தோறும் ராவின் மற்றும் மாதிரித் தேர்வு எழுதுவது பயனளிக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது

🏹 குறுக்கு வழிகளை தேடுவது. 100% ஏமாற்று வேலை.

🏹தேர்வு எழுதும் வரை சினிமா, கிரிக்கெட், கல்யாணம், காதுகுத்து, கிடாவெட்டு என அனைத்திலும் கலந்து கொள்வதை தவிர்ப்பது.

🏹 பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் லிருந்து ஒதுங்குவது.

🏹 அரசு வேலையா? உனக்கா? என தன்னம்பிக்கை குலைப்பவர்களிடமிருந்து தள்ளியிருப்பது.

TNPSC அறிவிப்பு கிடைத்தற்கரிய வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். யாருக்கு தேவைப்படுமோ அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

பாதங்கள் நடக்க தயாராக இருந்தால்  பாதைகள் மறுப்பு சொல்வதில்லை.