ருத்ராட்ச மாலையை அணிந்தவர்கள் அதனை பராமரிக்க‍ சில குறிப்புக்கள்
ருத்ராட்ச மாலையை அணிந்தவர்கள் அதனை பராமரிக்க‍ சில குறிப்புக்கள்
சைவ மதத்தினர் விரும்பி அணியும் ஆன்மீக மாலையே ருத்ராட்சம் ஆகு ம். மாலையில் உள்ள‍ ஒவ்வொரு ருத்ராட்சத்தில் இயற்கையாகவே மின் காந்த சக்தி உள்ளது. அந்த சக்தி முழுவதும் நமக்கு கிடைக்கவேண்டும், அதனால் ருத்ராட்சத்தை எப்போதும் தூய்மையாக வைத் திருக்கவேண்டும். ருத்ராட்சத்தில் உள்ள கோடுக ளை விபூதி சந்தனம் வைத்து மறைக்க கூடாது.
மாதம் ஒருமுறை ஆலிவ்ஆயில், கடுகு எண்ணெய், அல்லது பசும்பாலில் 24 மணி நேரம் ஊற வைத்து புதிய பிரஷ் கொண்டு தேய்த்து எடுத்து தூய்மையான நீரில் கழுவி துடைக்கவேண்டும். சோப் பை பயன்படுத்தகூடாது. ருத்ராட்சத்தை பாதுகாப் பாக வைக்கவேண்டும் எனில் சாணத்தில் தயாரித் த விபூதிக்குள் வைக்கலாம்.
rudraksha-mala-gal004ருத்ராட்ச மாலையை  சுத்தபடுத்தும்பொழுது  இதற் கான கீழ்க்கண்ட மந்திரத்தை  9முறை கூறவும். ருத்ராட்சமாலையை கையில் வைத்துக்கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும்.
ஓம் ஐயும் கிலியும் செளவும் ஸ்ரீயும்
ஹரிம்ஓம் நமசிவாய ஓம் சிவநேத்ராய
ருத்ராட்சாய நம;
 
 
ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது, தான் அதிகம் மதிப்பவரிடம் கொடுத்து வாங்கி பின் அணித்து கொள்ளவும்.. அவர்கள் காலில் விழுந்து வாங்கிக் கொள்ளவும்.
சிவன் கோவிலில் வைத்து அணிவது மிகவும் சிறப்பு. அணிந்தபிறகு ருத்ராட்சமாலையை காரணமில்லாமல் கழ‌ட்டக்கூடாது. முக்கியமாக சுய கட்டுப்பாட்டுடன் ஒழுக்க‍மாக இருப்ப‍ து மிக அவசியம்