டி மாதம் என்றாலே பண்டிகைகள்தான்.  அதுவும் அம்மனுக்கு விசேஷமான மாதம் ஆடிமாதம்.  இன்று (26.07.17) ஆடிப்பூரம் தினமாகும்.  இன்று என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

ஆடிமாதத்தில் வரும் பூரம் நட்சத்திர தினம் ஆடிப்பூரம் ஆகும்.  இன்று அம்பாளுக்கு வளையல் சாற்றும் தினமாகும்.  அம்மன் கோயிலில் கண்ணாடி வளையல்கள் வாங்கி,  அந்த வளையலை அம்மனுக்கு சாற்றி விட்டு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு அதை கொடுப்பார்கள்.

அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு, வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம்.  அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.

கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும்.  அதே போல் திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும்.

இன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம்.