செங்கோட்டை சுதந்திர தினவிழா இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

பழைய படம்

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழா, ஆண்டு தோறும் அமர்க்களப்படும்.

கண்ணுக்கு விருந்தாக நடைபெறும் பல்வேறு  கலை நிகழ்ச்சிகள், இந்த விழாவின் ‘ஹைலைட்’ ஆக இருக்கும்.

கொரோனா காரணமாக , இந்த ஆண்டு பெரிய அளவில் சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள் இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கும் நோக்கில், வி.வி.பி.க்கள் அமர குறைந்த எண்ணிக்கையில் இருக்கைகள் போடப்பட்டு, விருந்தினர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்.

இந்த ஆண்டு சிறுவர்- சிறுமிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் இருக்காது என்று டெல்லி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள்   வண்ணமிகு கலாச்சார நிகழ்ச்சிகளை செங்கோட்டையில் நிகழ்த்துவது வழக்கம்.

-பா.பாரதி.