சென்னை:

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? என்பது குறித்து விரிவான அ அறிக்கை தாக்கல் செய்ய சென்னை  நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் தெரிவிக்க கூறி உள்ளது.

வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கு, நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னையின் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், சென்னை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என, தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அத்துடன்  மேலும், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பிற பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டது குறித்தும், தற்போது அந்த ஆலைகள் செயல்படுகிறதா? அவற்றின் தற்போதைய நிலை என்ன, அவற்றின் மூலம் எவ்வளவு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் மக்கள் தண்ணீரின்றி அவதிக்கு உள்ளாகியுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, வேறு எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது என்பது குறித்தும் ஜூன் 17 ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.