தினகரன் – ராஜா

ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரனுக்கு எதிராக நாளை டைம் பாம் வெடிக்கும் என்று பா.ஜ.க.வின் தேசிய செயலாளா் எச்.ராஜா  அதிரடியாக பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  விழா ஒன்றில் பா.ஜ.க. மாநில தலைவா் தமிழிசை சௌந்தர ராஜன், தேசிய செயலாளா் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.. அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து கேட்கப்பட்டது.

இதனால் ஆத்திரமான எச்.ராஜா, “உங்கள் எல்லோருக்கும் ம் முக்கிய தகவல் ஒன்றை சொல்கிறேன்.  நீங்கள் அனைவரும் நாங்கள் (பா.ஜ.க.) தோல்வியடைந்தது குறித்தே பேசுகிறீா்கள்.

தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது. ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றது . நாளை டிடிவி தினகரனுக்கு எதிராக டைம் பாம் ஒன்று வெடிக்கப் போகிறது”  என்று  கூறிவிட்டுச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், எந்த அர்த்தத்தில் ராஜா கூறினார் என்று குழம்பினார். பிறகு அவரை தொலைபோசியில் தொடா்பு கொண்டு இது குறித்து கேட்டனர்.

அதற்கு ராஜா, “ஆா்.கே.நகா் மக்கள் அனைவருக்கும் குக்கா் கிடைத்துள்ளது. அடுத்ததாக குளிர்சாதனப் பெட்டி,  சலவை இயந்திரம் உள்ளிட்டவை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

கடந்த 29-ஆம் தேதி எம்எல்ஏவாக சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டார்  தினகரன். வரும் 8-ஆம் தேதி முதன் முதலாக சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் எச்.ராஜா தினகரனின் வெற்றி குறித்து சூசகமாக ஆனால் அதிரடியாக தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.