இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது பிறந்தநாளான நேற்று புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“பைட்டர்” என பெயரிப்பட்டுள்ள இந்த படத்தில் ஹிருத்திக் மனைவியாக, தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இருவரும் ஜோடியாக இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

விமான ‘பைலட்’ டாக ஹிருத்திக் ரோஷன், நடிக்கும் “பைட்டர்” படம், தலைப்புக்கு ஏற்றபடி முழு ஆக்‌ஷன் படமாக இருக்குமாம்.

இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

இவரது டைரக்‌ஷனில் ஹிருத்திக் ரோஷன், இதற்கு முன்பு ‘பங்க் பங்க்’ ‘வார்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ‘மார்ட் பிளிக்ஸ்’ நிறுவனத்துடன் சேர்ந்து டைரக்டர் சித்தார்த், தயாரிக்கிறார்.

“சித்தார்த் ஆனந்த், தனது பைட்டரில் என்னையும் சக பயணியாக ஏற்றிகொண்டதற்கு நன்றி. இந்த பைட்டர் வானம் நோக்கி பறக்கட்டும்” என ஹிருத்திக் ரோஷன், தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஷுட்டிங் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ‘பைட்டர்’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

– பா. பாரதி