சென்னை:

ஆர் கே நகரில்  500-க்கும் மேற்பட்டோர் மதிமுகவினர் ஓ.பன்னீர்ச்செல்வம் முன்னிலையில் இணைகின்றனர்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது தொகுதியான ஆர் கே நகர் தொகுதியில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்ச்செல்வம் பங்கேற்கிறார். அப்போது 500 க்கும் அதிகமான மதிமுகவினர்
அக்கட்சியின் வடசென்னை மாவட்ட பொருளாளர் எம் எம் கோபி தலைமையில் அதிமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.