ஹங்கேரி:

ங்கேரியில் இம்மாதம் 24-ஆம் தேதிக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பித்தது, இந்நிலையில் இன்று ஹங்கேரியின் அதிபர் ஜனோஸ் அடேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹங்கேரியின் அதிபர் ஜனோஸ் அடேர் ஹங்கேரியில் உள்ள மக்கள் அனைவரும் விரைவில் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பேசிய அதிபர் ஜனோஸ் அடேர்… “நம்முடைய மருத்துவர்களை நம்புவோம், நம்முடைய சுகாதார முறையை நம்புவோம்” ஹங்கேரி விரைவாக இந்த பெருந்தொற்றிலிருந்து வெளிவரும் எனவும் ஹங்கேரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.