நெல்லை:

ண் வாரிசு இல்லை என கூறி காதல் கணவர் தன்னை துன்புறுத்துகிறார் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் அருகே உள்ள சாத்தூரை சேர்ந்தவர்  சொர்ணலட்சுமி. இவரும், முத்துக்குமார் என்ப வரும் கடந்த காதல்திருமணம் செய்தவர்கள். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இதையடுத்து சொர்ணலட்சுமி குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளார்.  ஆனால், ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் சொர்ணலட்சுமியின் கணவருக்கு இருந்து வந்துள்ளது. இதன் காரண மாக சொர்ணலட்சுமியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.  மேலும் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாக முத்துகுமார் மிரட்டி உள்ளார்.

இதனால் சொர்ணலட்சுமி, தனது தாயார் வீட்டுக்கு வந்த நிலையில், அங்கு வந்தும் முத்துக்குமார் மிரட்டியதால், தானது 3 பெண் குழந்தைகளோடு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

கணவரின் துன்புறுத்தல் காரணமாக தான் பல முறை தற்கொலை முடிவை எடுக்க முயற்சி செய்ததாகவும், ஆனால், நன்றாக படிக்கும் தன் குழந்தைகளின் நலன் கருதி அதை  கைவிட்டதாக கூறிய அவர், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.