IPL 2016 தொடரில், புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடத்தை பிடித்த அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் நேற்றிரவு டெல்லி கோட்லா மைதானத்தில் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தது.
டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மோர்கலின் ஓவரில் தவான் (10 ரன்) போல்டு ஆனார். ஸ்கோர் சீரான வேகத்தில் ஹென்ரிக்ஸ் மற்றும் வார்னர் அடித்து ஆடினர். பவர்-ப்ளே முடிவில் ஐதராபாத் ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவரது ஒரே ஓவரில் ஹென்ரிக்ஸ் (31) மற்றும் வார்னர் (28) இருவரும் அவுட் அனார். யுவராஜ்சிங் மற்றும் ஹூடாவும் இணைந்து நன்றாக விளையாடினர். தீபக் ஹூடா (21) ரன்-அவுட் ஆனார். தொடர்ந்து யுவராஜ்சிங்கும் (44) கிளீன் போல்டு ஆக, பிபுல் ஷர்மா 2 சிக்சர் கடைசி ஓவரில் அடிக்க ஐதராபாத் அணி 160 ரன்களை கடந்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. ராபின் உத்தப்பா (11 ரன்), காலின் முன்ரோ (16 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கம்பீர் 28 ரன்கள் மற்றும் பதான் ரன்கள் எதுவும் எடுக்காமல் அடுத்து அடுத்து அவுட் அக கொல்கத்தா தோல்வி நோக்கி சென்றது. மனிஷ் பாண்டே மற்றும் சூர்யா குமார் யாதவ் அதிரடி அடி வெற்றி பெறுவார்கள் என்று என்னும் நேரத்தில் அடுத்து அடுத்து இருவரும் அவுட் அக, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் 2 விக்கெட்டுக்களையும், 31 ரன்களையும் எடுத்த ஹென்ரிகியூஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. ஐதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் தகுதிச் சுற்று-2 ஆட்டத்தில் குஜராத்துடன் மோதுகின்றது.