ஐதராபாத்:

சட்டவிரோதமாக குடியேறி இந்திய பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் துபாயில் வேலை செய்து வந்தார். அங்கு பாகிஸ்தானை சேர்ந்த முகமது உஸ்மான் இக்ராம் என்கிற முகமது அப்பாஸ் இக்ராம் (வயது 41) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் இந்திய இஸ்லாமியர் என்றும், டில்லியை சேர்ந்தவர் என்றும் கூறி திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து அந்த பெண் மகளுடன் இந்தியா திரும்பினார். அப்போது இக்ராமும் இந்தியா வந்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்ததாக இக்ராம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக போலி ஆவணம் மூலம் இந்தியா வந்தது தெரியவந்தது. அதோடு அந்த பெண்ணின் மகளின் 12வயது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி மிரட்டியுள்ளார்.

இக்ராம் பாகிஸ்தான் நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பவர் தெரியவந்தது. இது குறித்து அந்த பெண் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இக்ராமை கைது செய்தனர்.