பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஐதராபாத் – ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் கோல்கள் இன்றி முடிந்தது. முதல் பாதியில் கிடைத்த சில கோல் வாய்ப்புகளை ஜாம்ஷெட்பூர் அணியினர் வீணடித்தனர்.

இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கிய நிலையில், முதலில், ஐதராபாத் அணியின் அரிடேன் சான்டனா கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். அதேசமயம், 85வது நிமிடத்தில், இதற்கு ஜாம்ஷெட்பூர் அணி பதிலடி தந்தது.

அந்த அணியின் ஸ்டீபன் ஈஸ் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். ஆனால், அதன்பிறகு எந்த அணியாலும் கோலடிக்க முடியாததால், ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனிலேயே முடிந்தது.