டெல்லி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று  இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த கொய்னா மாத்திரை கள் சிறந்த தடுப்பு மருந்தாக உள்ளது என்று பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று  இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது. மேலும், எந்தவொரு மருந்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனாவை குணப்படுத்தும் மலேரியா மருந்து… பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்…

மலேரியா, வாத நிலைகள் மற்றும் பிற வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் சுமார் 70 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.