https://www.instagram.com/p/B-cDZZ3DRWg/

அமலா பாலின் தந்தை கடந்த ஜனவரி மாதம் புற்றுநோயால் அவதிப்பட்டு உயிர் இழந்தார்.

இந்நிலையில் தந்தையை இழந்தது குறித்து அமலா பால் இன்ஸ்டாகிராமில் உருக்கமாக போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

என் அப்பா புற்றுநோயால் இறந்தது என் வாழ்வில் புது கோணத்தை காட்டியுள்ளது. அதன் மூலம் பல விஷயங்களை உணர்ந்திருக்கிறேன்.

நம் அம்மாக்கள் மொத்த வாழ்க்கையையும் கணவர், குழந்தைகள், குடும்பத்தை பார்த்துக் கொள்ள செலவிடுகிறார்களே தவிர, தங்களுக்காக எதுவும் செய்வது இல்லை. தங்கள் மீதும் அன்பு செலுத்த அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது நம் கடமை. நானும், என் அம்மாவும் மன அழுதத்தால் பாதிக்கப்பட்டோம். அன்பால் தற்போது நாங்கள் ஃபீனிக்ஸ் பறவை போன்று பறக்கிறோம். எங்களை ஆதரித்த அனைவருக்கும், குறிப்பாக என் தம்பிக்கு நன்றி என்று கூறியுள்ளார் அமலா பால்..

சமீபத்தில் அமலா பாலின் திருமணம் குறித்து புகைப்படங்கள் வெளியாயின .பாடகர் பவ்னிந்தர் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதே வேகத்தில் நீக்கினார். இதையடுத்து அமலாவுக்கு திருமணமாகவில்லை என்று அவரின் மேனேஜர் தெரிவித்துள்ளார். அதை மக்கள் மறக்கவே அமலா இப்படி அப்பாவை பற்றி போஸ்ட் போட்டு நாடகமாடுவதாக சமூக வலைதளவாசிகள் விளாசியுள்ளனர்.