சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க கோரி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என்னை பெங்களூரில் உள்ள ஜெயலலிதாவின் மூத்த சகோதரி சைலஜா-சாரதி தம்பதியினரிடம் ஒப்படைத்து வளர்க்க செய்தனர். நான் சைலஜாவின் மகளாக வளர்ந்தேன். எனக்கு அப்போது ஜெயலலிதா தான் எனது தாயார் என்பது தெரியாது.

1996-ம் ஆண்டு சைலஜா என்னிடம் ஜெயலலிதாவை சென்று சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி நான் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அவர் என்னை கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் நான் உன் தாயார் என்று எதுவும் கூறவில்லை. பின்னர் பெங்களூர் திரும்பினேன். அதன் பிறகு பலமுறை ஜெயலலிதாவை சந்தித்தேன்.

இந்நிலையில் என் வளர்ப்பு தாய் சைலஜா 2015-ல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ம்தேதி இறந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் அவர் என் தாய் என்ற உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

தற்போது என்னை ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்க வேண்டும். ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.

வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று அம்ருதா தனது மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு இன்று மாலை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.