சென்னை:

சீன அதிபருடன் இன்று மாலை மாமல்லபுரத்தில் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று  தமிழில் பதிவிட்டு உள்ளார்.

தமிழகம் வரும் சீன அதிபருடன், பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் 2 நாள் சந்திப்பு நடைபெறுகிறது. இன்று மதியம் சீன அதிபர் ஜின்பிங் சென்னை வருகிறார். முன்னதாக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தமிழில் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில்,

சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.

என கூறியுள்ளார்.

இதே டிவிட் தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலும் பதிவிடப்பட்டு உள்ளது.