தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், கடந்த மாதம் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடத்திய பா.ஜ.க., இப்போது ‘நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியை’ நடத்துகிறது.

மதுரையில் நடைபெற்ற ‘நம்ம ஊர் பொங்கல்’ பண்டிகையில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் “வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் எனக்கு வாய்ப்பு அளிக்குமா” என்பது தெரியாது என்று கூறினார்.

“தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுமறு என்னை பணித்தால், நான் தயாராக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

“மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பெண்களுக்கு மதிப்பு அளித்தவர்” என்று குறிப்பிட்ட நடிகை குஷ்பு “கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின், பெண்கள் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு, கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் வருத்தம் அடைந்திருப்பார்” என்று மேலும் கூறினார்.

– பா. பாரதி