சென்னை

மிழக அமைச்சர் கடம்பூர் ராஜு வழக்கு தொடர்ந்தால் அதைச் சந்திக்க தயாராக உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் பற்றி திமுக தலைவர் முக ஸ்டாலின் பல புகார்களை எழுப்பி வருகிறார்.   அவர் புகார் எழுப்பும் போதெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அமைச்சர்கள் அவர் மீது வழக்கு தொடர உள்ளதாக எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கமாகி உள்ளது.

அவ்வகையில் திரையரங்குகள் உரிமையாளர்களிடம் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு பேரம் பேசியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் புகார் எழுப்பியது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  முக ஸ்டாலின் மீது இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து மு க ஸ்டாலின், “இதுவரை முதல்வர் உள்ளிட்ட பலரும் என் மீது வழக்கு தொடரப்போவதாகச் சொல்கிறார்கள் என்றாலும் யாரும் வழக்கு தொடரவில்லை.  அமைச்சர் முதலில் என் மீது வழக்கு தொடரட்டும்.  அவர் வழக்கு தொடர்ந்தால் நான் அதைச் சந்திக்கத் தயார்” என பதில் அளித்துள்ளார்.