சென்னை:

யன்தாரா குறித்து நான் பேசியதற்காக  திமுக என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே விலகிக் கொள்கிறேன்  என்று  நடிகர் ராதாரவி தெரிவித்து உள்ளார்.

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து பேசியது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை ராதிகா மற்றும் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நடிகை ராதாரவியை சஸ்பெண்டு செய்வதாக திமுக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் விளக்கம் அளித்துள்ள ராதாரவி, எனது பேச்சு நயன்தாராவுக்கும், அவரது காதலருக்கும் மனவருத்தத்தை தந்திருந்தால் – நயன்தாராவும் அவரை திருமணம் முடிக்க இருக்கிற விக்னேஷ் சிவனுக்கும் நான் என் மன வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

விருப்பப்பட்டால் என்னை அவர்கள் நேரில் சந்திக்கலாம்.இல்லை நான் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் தருகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

திமுகவில் இருந்து என்னை இடைநீக்கம் செய்வதற்கு விளக்கம் கேட்டால் உரிய விளக்கம் தருகிறேன். ஆனால், தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன்.. நடிகை நயன்தாராவை பற்றி நான் பேசுவதற்கு இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகிறது. .அவர்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே விலகிக் கொள்கிறேன்-

இவ்வாறு ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.