2008 ஆம் ஆண்டு வெளியான ‘பேஷன்’ என்ற இந்தி படத்தை மாதுர் பண்டார்கர் இயக்க கங்கனா ரணாவத்தும், பிரியங்கா சோப்ராவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்த கங்கனாவுக்கு மத்திய அரசின் சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அப்போது குடியரசு தலைவராக இருந்த பிரதிபா பாட்டீல் கையால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல, அந்த நேரத்தில் தன்னிடம் நல்ல உடை கிடையாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர் ஒருவரிடம் கங்கனா இப்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

“விழாவில் அணிந்து கொள்வதற்கான நேர்த்தியான உடையை , நானே தைத்துக்கொண்டேன். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த படத்துக்காக பெண் ஜனாதிபதி கையால் பரிசு பெற்றது மறக்க முடியாத தருணம்” என்று டவிட்டரில் கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கையால் பரிசு வாங்கும் புகைப்படத்தையும், அவர் வெளியிட்டுள்ளார்.

– பா. பாரதி