புதுச்சேரி:
நான் அவ்வாறு கூறவே இல்லை என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் புதுச்சேரி மாநிலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், இன்று புதுச்சேரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், “ புதுச்சேரி சொர்க்கப்பூமியாக இருந்தது ஆனால் தற்போது நரகமாக மாறிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன்”என்று தெரிவித்தது இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நான் அவ்வாறு கூறவே இல்லை என்றும், 30 தொகுதிகளிலும் கூட்டணியோடு வெற்றி பெறுவோம் என்று தான் சொல்லி இருந்தேன். நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.