சென்னை:

அதிமுகவில் எந்தப்பதவியையும் ஏற்கமாட்டேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்திருக்கிறார்.

தஞ்சையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடராஜன் இதனைத் தெரிவித்தார்.

பின்னர், அதிமுக கட்சியின் முக்கிய எந்தப்பதவியும் தனக்குத் தேவையில்லை என்றும் அதேநேரம் கட்சியை வெளியிலிருந்து பாதுகாப்பேன் என்றும் அவர் கூறினார்.