சென்னை:  ‘நீதிமன்றத்தின் மீது உயர்ந்த நம்பிக்கை வைத்துள்ளேன், நீதிமன்றத்தின் உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா டிவிட் போட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது நீதித்துறை மீதான விமர்சனம், காரணமாக, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். ஆனால், தலைமைநீதிபதி, நடிகர் சூர்யாவுக்கு அறிவுரை கூறி, அவமதிப்பு வழக்கு தேவையில்லை என்று அறிவித்திர்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை  ஏற்க்கொள்வதாக நடிகர் சூர்யா டிவிட்  பதிவிட்டுள்ளார்.

அதில்,

‘இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.

நான் எப்போதும் நம்முடைய நீதித்துறையை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன்.

இது நம்முடைய மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை நீதிமன்றமே.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ 

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.