சென்னை

மது தந்தை தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என  நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் இன்று ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார்.   அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என அக்கட்சிக்குப் பெயர் சூட்டியுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.   இந்நிலையில் நடிகர் விஜய் இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் விஜய், “இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.  அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.  மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக் கொள்கிறேன்.  மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புப்படுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.