சென்னை:

னக்கு கொரோனா என்று வெளியான செய்தி வதந்தி, நான் முழு உடல்நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன் என தமிழக  உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில்,  உயர்அதிகாரிகள், எம்எல்ஏக் களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில், விளக்கம் அளித்துள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,  தானக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை. முழு உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்று தெரிவித்து உள்ளார்.