சென்னை: நான் யார் என்பது எனக்கு தெரியும்; நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும் என்று அதிமுகவுக்கு எஸ்.வி.சேகர் பதில் தெரிவித்து உள்ளார்.
I know who I am; Modi knows what I am doing! S.Ve.Shekarபுதிய கல்விக்கொள்கை குறித்து, தமிழகஅரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர், அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள் என்று கடுமையாக விளாசியிருந்தார்.
எனக்கு பாஜக பதவிக் கொடுக்கவில்லை என்று வருத்தப்படவில்லை, . என்னைப் பொறுத்தவரை மோடி அரசாங்கத்துக்கு, ராமருக்கு அணில் மாதிரி உதவி செய்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பது பிரதமர் மோடிக்கு தெரியும்.
நீங்கள் ஏன் பாஜக ஆதரவு பிரச்சாரத்திற்கு வரவில்லை என சில பேர் கேட்கிறார்கள். என்னை பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் வரப்போகிறேன், கூப்பிடாமல் எப்படி போவது. அடையாளமே தெரியாத யாரோ ஜீப்பில் ஏறி பேசிக்கொண்டு போவார்கள். அடையாளம் தெரிந்த நான் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு பின்னால ஓட முடியுமா?
நான் போனில் சொன்னாலே ஒரு 5 ஆயிரம் ஓட்டு கிடைக்கும் அளவுக்கு செல்வாக்கு எனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும். ஆகவே எந்த இடத்தில் பேசனுமோ அங்கு பேசுவேன்.
எல்லாவற்றும் மேல் நூறு சதவீதம் நான் கடவுளை நம்புகிறேன். நான் பயப்படுபவன் அல்ல. பயந்தால் பொது வாழ்க் கைக்கு வர முடியாது. என் வீடு ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பெட்ரோல் பாம். மூன்று முறை கல்லால் அடித்து தாக்கினார்கள். பயந்திருந்தால் முதல் தடவையே விட்டுட்டு போயிருப்பேன். நான் யார் என்பது எனக்கு தெரியும்”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]