திருச்சி:

சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக மீட்பு பணி நடைபெற்ற வருகிறது. ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்ற வருகிறது. இதுவரை 35 அடி ஆழம் வரை துளையிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு  சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது இல்லம் முன்பு தம்மை காண்பதற்காக திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, , அனைவரது இதயங்களிலும், வாழ்கையிலும் இந்த தீபாவளி வெளிச்சத்தை கொண்டுவர வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக தெரிவித்தார், குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என தாம் ஆண்டவனை பிரார்த்திப்பதாக கூறினார்.

மேலும் குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதனை குறை கூற முடியாது என்று கூறியவர்,  ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை மூடியிருக்க வேண்டும், இந்த விவகாரத்தில் அரசை குறைகூற கூடாது. மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.