சென்னை:

மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.


சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ‘‘மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார். அரசியலுக்கு வந்த பின் ரஜினியுடன் பேசத் தயாராகவுள்ளேன். மாற்றம் தேவை என்று தான் அரசியலுக்கு வருவேன் என கூறினேன்.

எனது வாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை. அறவழியில் போராடுவதே தொடக்கம். அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடிக்கின்றனர். ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயார்’’ என்றார்.