டெல்லி:

ற்ற மாநில மக்களுக்கு முன்மாதிரியாக  டெல்லியில் ஆம்ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ள மக்களுக்கு சல்யூட் என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டுள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் 61 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 98 இங்களை மட்டுமே பாஜக கைப்பற்றி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு சட்டமன்ற தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை.

இந்த நிலையில், 3வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கப்போகும்  அரவிந்த் கேஜரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், ஆம் ஆத்மி வெற்றிக்கு பாராட்டும், மக்களுக்கு வணக்கம் செலுத்துவதாகவும் பதிவிட்டு உள்ளார்.

டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றுள்ளது… இது பாஜகவின் பொய் பித்தலாட்டங்களுக்கு விழுந்த பேரிடி, பாஜகவின் பிரிவினைவாத மற்றும் ஆபத்தான வியூகங்களை டெல்லி மக்கள் தோற்கடித்துள்ளனர். அடுத்து 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க இருக்கும் மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் டெல்லி மக்களுக்கு சல்யூட்… 

இவ்வாறு பதிவிட்டு உள்ளார்