சென்னை:

ந்திர டிவி9 நிகழ்ச்சியில், நான் அப்படி நடந்திருக்கக்கூடாது என்று வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். அந்த பேட்டியின்போது, தான்  பாதியில் கிளம்பிச் சென்றிருக்கக் கூடாது என்று மனம் வருந்தியுள்ளார்.

விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத் சென்ற இடத்தில் டிவி 9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார் தனுஷ்.

அப்போது சுசீலீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை பற்றி கேள்வி கேட்டதும், நிகழ்ச்சியின் பாதியிலேயே  கோபித்துக் கொண்டு வெளியேறி விட்டார்.

இது பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதுகுறித்து தனுஷ் தற்போது வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது,

பொதுவாக நான் அமைதியான ஆள். ஆனால் நான் எப்படி நடந்திருக்கக் கூடாதோ அப்படி நடந்துவிட்டேன். பேட்டியின்போது நான் அப்படி நடந்திருக்கக் கூடாது என்றும், நெறியாளரின் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்காக நான் இப்படி நடந்திருக்கக் கூடாது தான் என்றார்.

மேலும், பட வேலைகளில் பிசியாக இருந்ததால், இரண்டு வாரங்களாக சரியாக தூங்கவில்லை. அந்த பேட்டியை நான் தற்போது பார்க்கும்போது,

நிகழ்ச்சியில்  நான் நடந்து கொண்ட விதத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது. வேறு கேள்வி கேட்குமாறு பேட்டி எடுத்தவரிடம் நான் கூறியிருக்க வேண்டும் என்றார் தனுஷ்.