சென்னை:

த்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு, சரத்பவாரின் அழைப்பை ஏற்று சென்ற திமுக முதல்வர், அங்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதைடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  முதல்வா் பதவிக்காலம் சிறப்பாக அமைய உத்தவ் தாக்கரேவுக்கு திமுக சாா்பில் வாழ்த்துகள்.

மகாராஷ்டிர மாநிலத்தின் வளா்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வழங்கும் என நம்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் வாழும் தமிழா்களின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் உறுதி செய்ய புதிய அரசு, தமிழா்களோடு இணைந்து பணிபுரியும் என்று நம்புகிறேன்.

உயரிய மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைகள் குறித்து உத்தவ் தாக்கரே நம்மோடு இணைந்து குரல் கொடுப்பாா் என்றும் நம்புகிறேன்.

நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்கக்கூடிய வகையில், மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில், சரத் பவாா் முக்கியப் பங்காற்றியிருக்கிறாா்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.