டெல்லி: பிரபல நிறுவனங்களான எல் அன் டி, ஜீ குரூப் நிறுவனங்களில் நேற்று முதல் (4ந்தேதி) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி புலனாய்வு இயக்குநரகம் (டி.ஜி.ஜி.ஐ) என மறுபெயரிடப்பட்ட மத்திய கலால் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஜி.சி.இ), மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம், வருவாய் துறை, நிதி அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் உச்ச புலனாய்வு அமைப்பு ஆகும். ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பான உளவுத்துறை சேகரிப்பு, ஒருங்கிணைத்து இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருவதாகவும், மும்பையில் ஜீ குரூப்புக்கு சொந்தமான 15 இடங்களிள்ல சோதனை நடைபெற்று வருவதாகவும், இந்த சோதனை இன்று மாலை வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
இரு நிறுவனங்களின் நடவடிக்கை, வரித் துறையுடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு தொடர்பாக சோதனைகள் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளனார்.
மேலும், “இந்த இரண்டு நிறுவனங்களில் நடத்தப்படுடு வரும் சோதனைகள், திணைக்களத்தின் வரையறுக்கப்பட்ட சரிபார்ப்பு நடவடிக்கை ஜிஎஸ்டி உளவுத்துறை பகிர்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது” என்றும், “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 133 ஏ பிரிவின் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், வரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சில கேள்விகளுடன் நிறுவனத்தின் அலுவலகங்களுக்குச் சென்றுள்ளனர். நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறார்கள் மற்றும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]