சென்ன‍ை: மகேந்திரசிங் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து தான் எதுவும் தெரியாமலேயே இருந்ததாக கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி.

தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டவுடன், தன்னிடம் சாதாரண கிரிக்கெட் விஷயங்களை விவாதிக்க வந்தார் தோனி என்றுள்ளார் பாலாஜி.

எந்த இக்கட்டான சூழலிலிருந்தும் தோனி தன்னை எளிதாக விடுவித்துக் கொள்வார் மற்றும் அவர் தன் வழியில் நிற்காமல் போய்க்கொண்டேயிருக்கும் தன்மை உடையவர்.

சென்னை பயிற்சி முகாமில் இருந்தபோது, அவர் தனது ஓய்வை இன்ஸ்டாகிராமில் அறிவித்த சில நிமிடங்களில், என்னிடம் சில விளையாட்டு விஷயங்களை விவாதிப்பதற்காக வந்தார். ஆனால், அதற்கு சில நிமிடங்கள் முன்னர்தான் தனது ஓய்வை அறிவித்த அதிர்வை அவர் சுத்தமாக காட்டிக் கொள்ளவேயில்லை.

ஆனால், அவரின் ஓய்வை அறிவிப்பை கேள்விப்பட்ட எனக்கு, அதிலிருந்து மீள சிறிதுநேரம் பிடித்தது. 2000ம் ஆண்டிற்கு பிறகு, உலக கிரிக்கெட்டில், தோனிக்கு நிகராக இன்னொருவர் இல்லை என்பேன்” என்றுள்ளார் பாலாஜி.