மஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்பதாகவும் தமிழை ஆட்சிமொழியாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து உரையாற்றினார். அப்போது தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்பது பலருக்கும் தெரியாது என்றும் சமஸ்கிருதத்தையும் விட மிகப் பழமையான அழகான மொழி தமிழ் என்றும் மோடி கூறினார்

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது  என்ற பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை  தேசிய நூலாக; அறிவிக்க வேண்டுமெனவும் பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று  குறிப்பிட்டுள்ளார்.