சென்னை:

டிகர் கமல்ஹாசனை சந்தித்து பேச இருப்பதாக நடிகர் விசால் தெரிவித்துள்ளார். 

வரும் 21ம் தேதி நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விசால், சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தேன். இதற்கு இவ்வளவு இடைஞ்சல் வரும் என்று நான் நினைக்கவே இல்லை.

இந்த நேரத்தில் சொல்வது என்னவென்றால், மாற்றம் ஏற்படுவதை யாரும் தடுக்க முடியாது. எனக்கு வாழ்த்து தெரிவித்த கெஜ்ரிவாலுக்கு நன்றி.

நான் போட்டியிடுவதற்குப் பின்னால் யாரும் இல்லை. கமல் உட்பட எந்த நபரோ, அமைப்போ, கட்சியோ இல்லை. மீண்டும் சொல்கிறேன்.. ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் நலனுக்காகவே போட்டியிடுகிறேன்.

நிச்சயமாக அரசியல் கட்சி துவங்க மாட்டேன்.

விரைவில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசுவேன்” என்று விசால் தெரிவித்தார்.