கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் அக்டோபர் 9-ம் தேதி சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்குக் கடும் எதிர்ப்பு உருவானது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பதிவில் ;-


“சாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமரவைத்த அவலம்…. கண்டிக்கத்தக்க கொடூரச் செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ… நான் என் வாழ்வில் இத்தவறைச் செய்யமாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்” என பதிவிட்டுள்ளார் .