சண்டிகார்: எதிர்வரும் நாட்களில் போட்டியில் பங்கேற்க எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் சாதிப்பதற்கு தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் 18 வயதான இந்தியாவின் இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா.
அதற்கேற்ற வகையில், தற்போது தனது உடல் தகுதியைப் பராமரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஊரடங்கு காரணமாக, ஹரியானா மாநிலத்தின் ஹிசாரில் அமைந்துள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார் ஷர்மிளா.
அவர் கூறியுள்ளதாவது, “இந்திய அணியின் அனுபவ பயிற்சியாளர் மரிஜ்னே, சீனியர் வீராங்கனைகள் கேப்டன் ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே எனது அதிர்ஷ்டம்.
இவர்களின் மூலம் நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த வீராங்கனையாக மிளிர்வதற்காக என்னை நான் தயார் செய்து கொள்கிறேன்” என்றுள்ளார் அவர்.