சென்னை,

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி சேகர் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து பத்தரிக்கையாளர்கள் சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. ‘சைபர் கிரைம்’ போலீசார் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எஸ்.வி. சேகரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எஸ்.வி. சேகர்

இதற்கிடையே அவர் தலைமறைவு ஆகிவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எஸ்.வி. சேகர்,‘‘நான் தலைமறைவாக இல்லை. சொந்தவேலை காரணமாக பெங்களூரு வந்துள்ளேன். இன்னும் 3 நாட்களில் சென்னை திரும்புவேன்’’ என்றார்.