மதுரை:

ந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன் கடைக்காரர் மகள் மாணவி நேத்ரா தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசினார்.  மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார் என கூறியிருந்தார்.

இது வைரலான நிலையில், மோகன் குடும்பத்தினரை சந்தித்து பலர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஐ.நா. சபை, மதுரை மோகனின் மகள்  நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்ததுள்ளது. மேலும் அவருக்கு, ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய நேத்ரா, உலகம் முழுவதும் வறுமையே இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று கூறி உள்ளார்.