சென்னை:

அரசியலுக்கு வருவது குறித்து அதற்கான நேரம் வரும் போது தெரிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காலா சினிமா படப்பிடிப்புக்காக மும்பை செல்ல சென்னை விமானநிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘அரசியலுக்கு வருவது குறித்து உரிய நேரம் வரும் போது தெரிவிப்பேன். நடிப்பு எனது வேலை. எனது வேலையை செய்ய புறப்பட்டுள்ளேன்’’ என்றார்

மாட்டு இறைச்சி தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டார்