தமிழகத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ”நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் கண்ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருங்காட்சியக இயக்குநராக இருந்த கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூகநலத்துறை செயலாளராக இருந்த மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.