சென்னை: உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் (எஸ்இசி) பின்பற்ற வேண்டும் என்று திமுக சட்டப் பிரிவு  கோரியது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பயன்படுதத வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த 16ம் தேதி திமுக தலைமையகத்தில் நடைபெற்ற சட்டப் பிரிவு கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்பை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் எனவும் ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் ஒரு ஐ,ஏ,எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து வாக்குச் சீட்டுகளிலும் அந்தப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பதவியின் தேர்தலுக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகள் இருப்பதை எஸ்.இ.சி உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் தீர்மானம் கூறியது.

எஸ்.சி.சி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவ வேண்டும் என்று பிரிவு விரும்பியது. “முன்கூட்டியே எண்ணுவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும், மேலும் அனைத்து எண்ணும் அரங்குகளிலும் சரியான பாதுகாப்பு இருக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

அனைத்து பஞ்சாயத்து வார்டுகளும் 2017 விதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் எனவும், மேலும் அனைத்து பகுதிகளிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குத் தேவையான எண்ணிக்கையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் தெரிவித்துள்ளது.