ஆக்லாந்து

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் டேவ் ரிச்சர்ட்சன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் தெரிவித்ததாவது.

”டெஸ்ட் மாட்ச் ரசிகர்களுக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது.  வரும் 2019ல் ஐம்பது ஓவர்கள் உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பின் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.  இந்த போட்டிகளின் இறுதிச்சுற்று வரும் 2021ஆன் ஆண்டின் இடையில் நடைபெறும்.

இந்த தொடரில் குறைந்த பட்சமாக இரு போட்டிகளும், அதிகபட்சமாக ஐந்து போட்டிகளும் இருக்கும்.  ஏப்ரல் 2021ல் அரை இறுதியில் வெல்லும் இரு அணிகளுக்கிடையே ஆன இறுதிப் போட்டி அதன் பின் இரு மாதஙக்ள் கழித்து நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.