ண்டன்

ங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தின் போது பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அணிய தடை விதித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது.    நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.   இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களில் இருவர் ஆப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அணிந்து இருந்தனர்.

கிரிக்கெட் போட்டி விதிகளின்படி ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அணிவது தடைசெய்யப்பட்டதாகும்.    அப்படியே அணிந்திருந்தாலும் அந்த கைக்கடிகாரம் அணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  செய்திகளை அளிக்கும் எந்த ஒரு கருவியையும் வீரர்கள் பந்தயத்தின் போது அணிந்திருந்தால் அதன் மூலம் மேட்ச் ஃபிக்ஸிங் நடக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படுள்ளது.

இதை ஒட்டி பாகிஸ்தான் வீரர்கள் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை கழற்றுமாறு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.  வாரியம், “ஆப்பிள் கைக்கடிகாரங்கள் மூலம் எந்த ஒரு தொலைபேசி அல்லது மொபைலை தொடர்பு கொள்ள முடியும்.   அத்துடன் வை-பை வசதி மூலம் செய்திகள் அனுப்பவும் பெறவும் முடியும்.  அதனால் இந்த கைக்கடியாரங்களை அணியக்கூடாது என்பதை பாகிஸ்தான் வீரர்களுக்கு விளக்கினோம்.   அவர்களும் அதைக் கழறி விட்டனர்” என தெரிவித்துள்ளது.