மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்கவிருந்த டி 20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  சார்பில் டி 20 உலக கோப்பை வரும் அக். 18 முதல் நவ. 15 வரை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட உள்ளது. கொரோனா காரணமாக, உலக கோப்பை தொடர் நடத்துவது சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு கூறியது.
ஆகையால் உலக கோப்பை தொடர் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் ஐசிசி இறுதி முடிவை அறிவிக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில், இன்று ஐசிசி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில் உலக கோப்பை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் டி 20 உலக கோப்பையை ஒத்தி வைப்பதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.