லண்டன்:

உலகக் கோப்பையை மேற்கு இந்திய தீவுகள் அணி கைப்பற்றும் என மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, மேற்கு இந்திய தீவுகள் அணியை எளிதாக எடை போட முடியாது. எங்கள் அணியின் வீரர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தியிருக்கிறேன்.

இந்த ஆண்டு எங்களது ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றேன். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆட்டத்தை மேற்கு இந்திய தீவுகள் அணியினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றார்.

 

உலகக் கோப்பை போட்டிகளில் தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளராகியிருக்கிறார் சச்சின் தெண்டுல்கர்.

இதற்கிடையே, பேட்டிங் மட்டுமின்றி மற்றொரு விசயத்திலும் சச்சின் தெண்டுல்கரை பின்பற்றி விராட் கோலி வருகிறார்.

தெண்டுகல்கருக்குப் போல், விராட் கோலிக்கும் லண்டனில் மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உசைன் போல்ட். சர் மோ ஃரா மற்றும் தெண்டுல்கர் போன்று கோலிக்கும் மெழுகுச் சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடியும்வரை, விராட் கோலி மெழுகுச் சிலை லண்டனில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருக்கும்.