டில்லி:

சிஐசிஐ வங்கிக் கிளைகளில் ரொக்கமாக பணம் எடுத்தால் ரூ.125 கட்டணம், அதுபோல ரொக்கமாக பணம் செலுத்தினாலும் கட்டணம் என்று என்று  ஜீரோ பேலன்ஸ் வாடிக்கையாளரை அலற விட்டுள்ளது ஐசிஐசிஐ வங்கி. இந்த புதிய திட்டம் அக்டோபர் 16ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அக்டோபர் 16ம் தேதி முதல் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வாடிக்கையாளர்களிடம், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.100 முதல் ரூ.125 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

நாட்டில் உள்ள தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி முன்னிலை வகித்து வருகிறது.  சமீபத்தில் அந்த வங்கி வெளியிட்டுள்ள தகவலில்,

அக்டோபர் 16ம் தேதி முதல், ஜீரோ பேலன்ஸ் கணக்கு வாடிக்கையாளர்கள்  வங்கி கிளைகளில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.100 முதல் ரூ.125 வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் கிளையில் பணத்தை டெபாசிட் செய்யும் போதும் கட்டணம் வசூலிக்கப்படும்.

எங்களது வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை டிஜிட்டல் வழிமுறையில் மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் இந்தியா நடவடிக்கைகளில் பங்களிப்பை அளிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தி என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். வாயிலாக மேற்கொள்ளும் பணப்பரிமாற்றம் மற்றும் யூ.பி.ஐ. பரிவரித்தனை களுக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளைகளில், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான என்.இ.எப்.டி. பரிவர்த்தனைகளுக்கு ரூ.2.25 முதல் ரூ.24.75 வரை கட்டணம் (ஜி.எஸ்.டி.) வசூலிக்கப்படுகிறது.

ரூ.2 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 முதல் ரூ.45 வரை கட்டணம் (ஜி.எஸ்.டி.) வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.