புதுடெல்லி:
பாரத் பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

புனேவின் ஐ.சி.எம்.ஆரின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்.ஐ.வி) கொரோனா தடுப்பு மருந்து  உருவாக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மேற்குரிய இரு அமைப்புகளிடையே தடுப்பூசி மேம்பாட்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.வி தடுப்பூசி வளர்ச்சிக்கு பிபிஐஎல்-க்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் பிபிஐஎல் தடுப்பூசி மேம்பாடு, அடுத்தடுத்த விலங்கு ஆய்வுகள் மற்றும் தடுப்பூசியின் மருத்துவ அளவுகள் ஆகியவற்றை விரைவுபடுத்த விரைவான ஒப்புதல்களை பெற உள்ளதாகவும்  ஐசிஎம்ஆர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது மற்றும் நாட்டில் 59,662-ஆக கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.